உடுமலை அருகே வீடு தீப்பிடித்து எரிந்து சேதம் - பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்

உடுமலை அருகேயுள்ள சடையகவுண்டன் புதூரில் மின்கசிவு காரணமாக வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை எரிந்து நாசமானது.


திருப்பூர்: உடுமலை அருகே மின்கசிவு காரணமாக வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்து நாசமானது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அந்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட சடைய கவுண்டன் புதூரில் லட்சுமணன் (55) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் லட்சுமணன் குடும்பத்துடன் வெளியூரில் உள்ள கோவில் திருவிழாவுக்குச் சென்றார்.



இன்று காலையில் திரும்பி வந்து பார்த்த போது வீடு முழுவதும் எரிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



பின்னர் உள்ளே சென்று பார்த்த பீரோவில் வைத்திருந்த வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள், இரு சக்கர நான்கு சக்கர வாகனம், ரூ.1.50 லட்சம் ரொக்கம் ஆகியவை எரிந்து சேதமானது.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இருப்பினும் உடுமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...