கோவையில் போதை மாத்திரை விற்பனை - இளைஞரை கைது

கோவை போத்தனூர் பகுதியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட வெள்ளலூர் மகாலிங்கபுரத்தை சேர்ந்த சசிதரன் எனும் இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 அட்டைகளில் 88 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை போத்தனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் நேற்று மாலை அங்குள்ள கோணவாய்க்கால் பாளையம் டாஸ்மாக் கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 10 அட்டைகளில் 88 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், அவர் வெள்ளலூர் மகாலிங்கபுரம், ராமசாமி நகரை சேர்ந்த பூபாலன் மகன் சசிதரன் (வயது 22) என்பது தெரியவந்தது. இவர் பிளம்பர் வேலை செய்து வருவதும், குடும்பத்தாரிடம் குடித்துவிட்டு தொடர்ந்து சண்டையிட்டு பிரச்சனை செய்வதையும் அவர் வாடிக்கையாக செய்துவருவதும் தெரியவந்தது.

இந்த நிலையில் போதை மாத்திரை விற்றதற்காக கைது செய்யப்பட்ட சசிதரன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...