கோவையில் கல்லூரி மாணவியை கடத்தி சென்ற ஓட்டுநர் போக்சோவில் கைது!

கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவியை ராமேஸ்வரத்திற்கு கடத்திச் சென்ற சாத்தூரை சேர்ந்த ஓட்டுனர் ஞானபிரகாசத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கடத்திச் சென்ற ஓட்டுனரை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்த 17வயது மாணவி கோவையை அடுத்த கோவில்பாளையத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து வெளியே சென்ற மாணவி மீண்டும் கல்லூரிக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில் பெற்றோர் கோவில்பாளையம் காவல்நிலையத்தில் மாணவியை காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் கோவில்பாளையம் போலீசார் மாணவியின் செல்போன் மூலம் அவர் தொடர்பு கொண்ட நபர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் அவர் சாத்தூரை சேர்ந்த ஓட்டுநர் ஞான பிரகாசம் (27) என்பவரோடு தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஞானப்பிரகாசம், செல்போன் சிக்னலை சோதனை மேற்கொண்டதில் ராமேஸ்வரம் பகுதியில் இருப்பது தெரியவந்தது.



இதனை தொடர்ந்து கோவில்பாளையம் போலீசார் ராமேஸ்வரம் சென்று ஞானபிரகாசத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...