கோவையில் தனியார் கல்லூரி பேருந்து மீது வேன் மோதி விபத்து - வேன் ஓட்டுநர் பலியான சோகம்!

கோவை மாதம்பட்டி அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது கார் மோதிய விபத்தில், காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஐடி நிறுவனத்திற்கு வாடகை வேன் ஓட்டி வந்த ராமலிங்கம்(30) என்பவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.


கோவை: மாதம்பட்டி அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது இகோ வேன் மோதி விபத்து, வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை பூலுவப்பட்டியை சேர்ந்தவர் ராமலிங்கம் (30). இவர் ஐடி நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வேன் ஓட்டி வந்தார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல சிறுவாணி சாலையில் ராமலிங்கம் காரில் வேலைக்குச் சென்றுள்ளார்.



அப்போது மாதம்பட்டி கருப்பசாமி தோட்டம் அருகே வந்த போது, ராமலிங்கம் முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியதில், ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்து வந்த பேரூர் போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...