கோவையில் தனியார் கல்லூரி பேருந்து மீது வேன் மோதி விபத்து - வேன் ஓட்டுநர் பலியான சோகம்!

கோவை மாதம்பட்டி அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது கார் மோதிய விபத்தில், காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஐடி நிறுவனத்திற்கு வாடகை வேன் ஓட்டி வந்த ராமலிங்கம்(30) என்பவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.


கோவை: மாதம்பட்டி அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது இகோ வேன் மோதி விபத்து, வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை பூலுவப்பட்டியை சேர்ந்தவர் ராமலிங்கம் (30). இவர் ஐடி நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வேன் ஓட்டி வந்தார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல சிறுவாணி சாலையில் ராமலிங்கம் காரில் வேலைக்குச் சென்றுள்ளார்.



அப்போது மாதம்பட்டி கருப்பசாமி தோட்டம் அருகே வந்த போது, ராமலிங்கம் முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியதில், ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்து வந்த பேரூர் போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...