ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு - கோவையில் முக்கிய குற்றவாளி கைது!

கோவை சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு வந்த பாபு என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தொடர்புடைய பாபு என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி மற்றும் இதர பொருட்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்வதும் மற்றும் மற்ற உபயோகங்களுக்குப் பயன்படுத்தப்படுவதும் முற்றிலுமாக தடுக்கப்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி உத்தரவின் பேரில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி, சேரன் மாநகர் அருகே 1,500 கிலோ ரேஷன் அரிசியை ஆம்னி வேனில் கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதில் பாபு என்பவருக்குத் தொடர்பு இருப்பதும், அரிசி கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரிய வந்தது. இந்நிலையில் குடிமைப் பொருள் வழங்கல் காவல் ஆய்வாளர் மேனகா தலைமையிலான தனிப்படையினர், இன்று பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...