கோவையில் நாளை கல்விக் கடன் முகாம் - மாவட்ட நிர்வாகம் தகவல்

கோவை மாவட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கல்விக் கடன் பெறுவதற்காக ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது.


கோவை: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் மாணவர்களுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கல்விக் கடன் உதவி பெறுவதற்கான முகாம் ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் காலை10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும் இந்த முகாமில் கலந்து கொண்டு கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் கிழ்கண்ட ஆவணங்களின் நகல்களைக் கொண்டு வர வேண்டும்.

1.பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4 (மாணவர் மற்றும் பெற்றோர்) மற்றும் ஆதார் அட்டை(மாணவர் மற்றும் பெற்றோர்)

2. பான்கார்டு/பாஸ்போர்ட்/விசா நகல்

3. இருப்பிட சான்று

4.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரி தாக்கல் செய்த படிவம்-16/16ஏ

5. தாசில்தாரிடமிருந்து சமீபத்தில் பெறப்பட்ட வருமான சான்றிதழ்

6. அரசு ஒதுக்கீடு மூலம் சேர்க்கை பெற்ற சான்று

7. SSLC HSC மற்றும் டிகிரி: மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்கள்

8. கல்லூரி/பல்கலைக்கழகத்தின் சேர்க்கைக்கான கடிதம்

9. கல்லூரி/பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட கட்டண விவர கடிதம்

10. கடைசி ஆறு மாதங்களுக்கு வரவு செலவு மேற்கொள்ளப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல்.

ஆகியவை எடுத்து வந்து அணுகவும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தினை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...