ஜல்லிக்கட்டு குறித்த ஆங்கில புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளரும், அயலக தமிழர் நலவாரிய தலைவருமான கார்த்திகேய சிவ சேனாதிபதி ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து எழுதிய Thunderous Run Bountiful Harvest எனும் ஆங்கில புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்கள் பெற்றுக் கொண்டனர்.


சென்னை: ஜல்லிக்கட்டு குறித்து கார்த்திகேய சிவ சேனாதிபதி எழுதிய Thunderous Run Bountiful Harvest என்ற ஆங்கில புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளரும், அயலக தமிழர் நல வாரிய தலைவருமான கார்த்திகேய சிவசேனாபதி ஜல்லிக்கட்டு விளையாட்டை ஆங்கிலத்தில் ஆவணப்படுத்தும் நோக்கில் "Thunderous Run Bountiful Harvest" என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இந்த புத்தகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட தமிழக ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் புத்தகத்தை எழுதிய கார்த்திகேய சிவ சேனாதிபதி பேசுகையில், 2017ஆம் ஆண்டு தமிழகத்தில் மெரினா புரட்சியை தொடர்ந்து நாங்கள் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு கட்டங்களில் சட்ட சிக்கலை தீர்க்க வாதிடும் போது குதிரை பந்தயத்திற்கு இருப்பது போல் ஆங்கிலத்தில் ஜல்லிக்கட்டை பற்றிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பதை உணர்ந்தோம். எனவே அப்போது அதை தொகுக்கும் முயற்சியில் இறங்கினோம். இதில் என்னுடன் ரோஜா முத்தையா, இயக்குனர் சுந்தர் மற்றும் கட்டிடக்கலை வல்லுநர் கார்த்திக் ஆகியோரின் முயற்சியின் விளைவாக அறிவியல் மற்றும் தொன்மையான பல விவரங்களை இந்த புத்தகத்தில் தொகுத்துள்ளோம், என்றார்.

நிகழ்ச்சியில் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் பழ.செல்வகுமார், ரோஜா முத்தையா, நூலக இயக்குநர் சுந்தர்கணேசன், கட்டிடக்கலை வல்லுநர் கார்த்திக் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...