கோவையில் சாலையில் நடந்து சென்றவரிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு - சர்வர் கைது

கோவை உக்கடம் பகுதியில் பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பைசல் என்பவரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த புதுக்கோட்டை சேர்ந்த சர்வர் குமரேசன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை உக்கடம் ஜி எம் நகர் பகுதி சார்ந்தவர் பைசல். இவர் பழக்கடையில் கூழிதொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றார். இந்த நிலையில். இவர் தனது வேலையை முடித்துவிட்டு ஈஸ்வரன் கோயில் வீதியில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு நபர், அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.தான் கூலித் தொழிலாளி என்றும், தன்னிடம் பணம் இல்லை என்று ஃபைசல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், அந்த நபர் கத்தி முனையில் பைசலின் பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்துச் சென்றார்.

இதுகுறித்து பைசல் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.

விசாரணையில் அந்த நபர் புதுக்கோட்டை சேர்ந்த குமரேசன் என்பது தெரியவந்தது. ஓட்டல் ஒன்றில் சர்வராக வேலை செய்வந்த குமரேசன், வழிப்பறியில் ஈடுபட்டது உறுதியானதால், அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...