கோவை ஈசா யோகா மையத்தில் ஆதியோகி சிலை திறப்பு விழாவிற்கு தடைவிதிக்க கோரிக்கை.


கோவை ஈசா யோகா மையத்தில் மலை தள பாதுகாப்பு துறை அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலை திறப்பு விழாவிற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் சிலை திறப்பு விழாவிற்கு வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு கருப்பு கொடிகாட்டப்போவதாக சமூக நீதிக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈசா யோகா மையமானது அமைந்துள்ளது. இங்கு 112 அடி உயரத்தில் பிரமாண்டமாக ஆதியோகி சிலையானது அமைக்கப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி சிலையை திறந்து வைக்கின்றார். இந்நிலையில் ஈசா யோகா மையமானது மலைதள பாதுகாப்பு துறையிடம் சிலை அமைக்க அனுமதி பெறவில்லை எனவும் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட சிலை திறப்பு விழாவிற்கு அனுமதி வழங்க கூடாது எனவும் கூறி கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரனிடன் சமூக நீதிக்கட்சியினர் இன்று மனு அளித்தனர். மேலும் அனுமதி பெறாத சிலையை திறக்க இந்திய பிரதமர் மோடி வந்தால் அவருக்கு கருப்பு கொடிகாட்டப்போவதாகவும் சமூக நீதிக்கட்சியினர் தெரிவித்தனர்.

மேலும் அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள  ஆதியோகி சிலை திறப்பு தொடர்பாக ஈசா மையம் வைத்துள்ளா விளம்பரங்களை அகற்ற வேண்டும் எனவும் சமூக நீதிக்கட்சியினர் தெரிவித்தனர். மேலும் கோவையில் அனைத்து துறைகளிலும் அனுமதி பெற்ற நிலையில் அம்பேத்கர் சிலையை அமைக்க அனுமதிக்காத மாவட்ட நிர்வாகம், மலைதள பாதுகாப்பு துறையில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலையை திறக்க அனுமதித்துள்ளதாகவும் சமூக நீதிக்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...