கோவையில் கல்லூரி மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம் - பிரபல வங்கிகள் பங்கேற்பு

கோவையில் கல்லூரி மாணவர்களுக்காக நடந்த கல்விக் கடன் முகாமினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடக்கி வைத்தார். ஐஓபி, எச்.டி.எப்.சி, டி.எம்.பி, பேங்க் ஆப் பரோடா, ஆக்ஸிஸ் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஃபெடரல் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் பங்கேற்று மாணவர்களுக்கு கடனுதவி வழங்கின.


கோவை: கோவை மாவட்டத்தில் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களில் கல்வி கடன் தேவைப்படும் மாணவர்களுக்காக ஒரு நாள் கல்விக்கடன் முகாம் இன்று நடைபெறுகிறது.

கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்றுவரும் இந்த முகாமில் மாவட்ட முன்னோடி வங்கிகள் கடன் உதவிகளை வழங்குவதற்காக பங்கேற்றுள்ளன. இதில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் கல்வி கடன் பெறுவதற்காக தெரிவிக்கப்பட்டுள்ள ஆவணங்களை கொண்டு வந்து விண்ணப்பித்து வருகின்றனர்.



முகாமினை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து மாணவர்களுடன் பேசினார். பின்னர், முகாமினையும் ஆட்சியர் பார்வையிட்டார்.



ஐஓபி, எச்.டி.எப்.சி, டி.எம்.பி, பேங்க் ஆப் பரோடா, ஆக்ஸிஸ் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஃபெடரல் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் கடன் உதவிகளை வழங்குகின்றன. இந்த முகாம்கள் மூலம் 350 கோடி வரை கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...