கோவையில் சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் - காவல் ஆணையரிடம் மாணவர்கள் மனு!

கோவை ரயில் நிலையம் அருகே சட்டக்கல்லூரி மாணவர் மீது ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து சட்ட கல்லூரி மாணவர்கள், மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனுவை அளித்துள்ளனர்.


கோவை: கோவை ரயில் நிலையம் அருகே சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்ட கல்லூரி மாணவர்கள் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் கோவை வடவள்ளி பகுதியில் தங்கி மருதமலை சாலையில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். மேலும் தற்போது வருவாய்க்காக பகுதி நேரமாக இருசக்கர வாகன டாக்சி (Rapido) ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு கோவை ரயில் நிலையம் அருகே வாடிக்கையாளர் ஒருவரை அழைக்க வந்தபோது, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் ராஜாவிடம் தகாத வார்த்தைகளில் பேசி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் ராஜாவை சூழ்ந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சட்டக் கல்லூரி மாணவர் ராஜா, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.



இந்நிலையில் சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் சுமார் 60க்கும் மேற்பட்டோர், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து விசாரித்த காவல் ஆணையர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...