முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கை வாக்கெடுப்பு மக்கள் மன்ற விருப்பத்திற்கு எதிரானது- மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு மக்கள் மன்ற விருப்பத்திற்கும் அறநெறிகளுக்கும் எதிரானது என்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று கோவை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் மாநில செயலாளர் குமாரசாமி செய்தியாளர்களிடயே பேட்டியளித்தார்.

அப்போது, நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக-வின் முன்னாள், இன்னாள் பொதுச் செயலாளர்கள் தலைமையில் இந்த ஆட்சி நடைபெறுவதாக கூறுவதே அவர்கள் ஆளத்தகுதியில்லாதவர்கள் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது. 

இவர்கள் தலைமையில் ஆட்சி நடைபெறாது என்று எடப்பாடி அறிவித்திருக்க வேண்டும். நிலுவையில் உள்ள மக்கள் பிரச்சனைகளை தீர்க்க தற்போதைய முதலமைச்சர் வழிவகை செய்ய வேண்டும்.

கோவையில் ஆதிவாசிகளின் நிலங்கள் அபகரிப்பு, வனப்பகுதி ஆக்கிரமிப்பு, இயற்கை வள சுரண்டல் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கார்ப்பரேட் சாமியார் ஜக்கியின் தலைமையில் நடைபெறும் சிவன் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வருவது ஆரோக்கியமான முன்னுதாரனம் அல்ல. 

எனவே, ஜக்கி வாசுதேவ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்ள கூடாது. அவ்வாறு பிரதமர் வருவது உறுதியானால் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியின் சார்பில் வருகிற 22 அல்லது 23ம் தேதிகளில் பிரதமரை கண்டித்து கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தப்படும்.

இதே போல் நாட்டில் அச்சு ஊடக உரிமையாளர்கள் செய்தியாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடிக்கும் நிகழ்வுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தமிழகத்தில் கஞ்சா வியாபாரிகளால் செய்தியாளர் தாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல்களுக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும் என குமாரசாமி  கோரிக்கை விடுத்தார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...