நெருக்கடியைக் கண்டித்து ஒரு நாள் முழுவிடுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு பல்வேறு நெருக்கடியான வேலைப் பணிகள் விதித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும், தமிக அரசால் அமல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு இத்துறையைச் சார்ந்தவர்களையே அதிகமாகவும், நேர வரையரை இன்று வேலை வாங்குவதாகவும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தொடர்ந்து, மகாத்மா காந்தி வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான நிதி ஒதுக்காமல், பதிவேடுகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகப்படுத்துவதாகவும், அதனை எழியமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தனிநபர் கழிப்பறை, கால்நடை வழங்குதல், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த எங்கள் துறை ஊழியர்கள் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலைப்பழுவை மட்டுமே தினித்து வருவதாகவும், அரசு விடுமுறை நாட்களிலும் ஏதேனும் கூட்டம் அல்லது நிகழ்ச்சி வைத்து ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவைப்பதாகவும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, இத்தகைய ஊழியர் விரோதப் போக்கை தடுக்கக்கோரி இன்று ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். 

மேலும், இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வுகாண வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...