தாராபுரத்தில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு - மக்கள் அவதி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த சில வாரங்களாகத் தொடரும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால், குழந்தைகள், முதியவர் உட்பட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காலை, மாலை, மதியம், இரவு என பல்வேறு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மேலும், மின்சாரம் வந்து சென்றால் மின்விசிறி உட்பட வீடுகளில் உள்ள எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிக் சாதனங்கள் பழுதாகிவிடுகின்றன.

தற்போது 12ஆம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு தேர்வில் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் வகையில் தொடரும் இந்த மின்வெட்டை சரிசெய்து, சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என தாராபுரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...