தாராபுரத்தில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் - விரைவில் திறக்க கோரிக்கை

தாராபுரத்தில் ரூ.2.20 கோடி செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தை நேரில் பார்வையிட்ட விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், இந்த மையத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டடம் தாராபுரம் வசந்தம் நகரில் ரூ.2 கோடியே 20 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டப்பட்டது. இதில் உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகம், தோட்டக்கலை துறை அலுவலகம், வேளாண் பொறியியல் அலுவலகம், வேளாண் வணிக அலுவலகம் உள்பட அனைத்தும் விவசாய துறைகளும், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் செயல்பட உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

இந்தக் கட்டிடங்களை உடனடியாக திறப்பதன் மூலம் விவசாயிகள் தங்களது பயிர்கள் தொடர்பாக உள்ள சந்தேகங்களை போக்கவும், தொழில்நுட்ப வசதியை பெறவும், வேளாண் இடுப்பொருட்களை பெறவும், ஒரே இடத்தில் அனைத்து தேவைகளையும் பெற இயலும். கட்டிட பணிகள் முடிவடைந்து ஆறு மாதங்கள் ஆனநிலையில் வேளாண்மை மையத்தை திறக்க இதுவரை திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட தலைவர் அலங்கயம் ஈஸ்வரமூர்த்தி, தமிழ்நாடு கட்சி சார்பற்ற விவசாய சங்க மாநில தலைவர் ஏ.காளிமுத்து மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தைப் பார்வையிட்டனர்.

பின்னர் பேசிய உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட தலைவர், “ விவசாயிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனரிடம் ஆலோசனை பெற்று இடுபொருட்களை பெற்றுக்கொண்டு மீண்டும் வேளாண்மை பொறியியல் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் கவுண்டச்சிபுத்தூர் ஊராட்சியில் சேரன் நகரில் செயல்பட்டு வரும் தோட்டக்கலை அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். எனவே, விவசாயிகள் நலக்கருதி, காலம் தாழ்த்தாமல் கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்” என்றார்.

Newsletter

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...