கோவையில் ஆன்லைனில் வேலை தேடிய பெண்ணிடம் ரூ.9 லட்சம் மோசடி

கோவையில் ஆன்லைனில் வேலை தேடிய அத்திப்பாளையத்தை சேர்ந்த 40 வயது பெண்ணிடம், முதலீடு என்ற பெயரில் 9 லட்சம் ரூபாயை சுருட்டிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சரவணம்பட்டி அடுத்த அத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் ஆன்லைனில் வேலை தேடினார். அப்போது அவரின் அலைபேசியில் வந்த டெலகிராம் லிங்கில் ரேட்டிங் தரும் பணி குறித்து தெரிவித்திருக்கின்றது.

இதனை நம்பிய பெண் டெலிகிராம் ஆப்பில் சில பக்கங்களுக்கு சென்றுள்ளார். ஒவ்வொரு டாஸ்கையும் கம்பிளீட் செய்திருக்கின்றார். முதன்முறையாக முதலீடு செய்து 1000 ரூபாயை சம்பாதித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிக முதலீடு செய்ய முடிவெடுத்த அப்பெண் அவரது, வங்கி கணக்கில் 15 நாட்களுக்குள் பத்துக்கும் மேற்பட்ட முறை 9,12,106 ரூபாயை எதிர் தரப்பினர் வங்கி கணக்குக்கு மாற்றினார். அப்போது முதலீடு செய்த பணம் திரும்பி வரவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, இவரது பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...