கல்வி நிறுவனங்களுக்கு அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை - டீ மாஸ்டர் கைது!

கோவை ஆம்னி பேருந்து நிலையம் அருகில் டீக்கடையில் புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த டீ மாஸ்டர் வைரமூர்த்தி என்பவரை ரத்தினபுரி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை ஆம்னி பேருந்து நிலையம் அருகே பின்புறம் பேக்கரி ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள பேக்கரி அருகாமையில் ரத்தினபுரி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பேக்கரியில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அதில், சிகரெட், பீடி போன்ற புகையிலைப் பொருட்களை பேக்கரியில் வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

பள்ளி கல்லூரி போன்ற கல்வி நிலையங்களுக்கு அருகாமையில் இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டத்திற்கு புறம்பாக பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் புகையிலைப் பொருட்களை விற்றதற்காக பேக்கிரியிலிருந்த வைர மூர்த்தி என்ற டீ மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து சிகரெட் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட டீ மாஸ்டரை பின்னர் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...