பள்ளி குழந்தைகளுக்கு வாகன வசதி கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள காரேகவுண்டம்பாளையம் பகுதி மக்கள், பள்ளி குழந்தைகளுக்கு வாகன வசதி செய்துதரக் கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறியுள்ளதாவது:- எங்கள் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களாக மக்கள் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் தினக் கூலிகளாக வேலை செய்து வருகிறோம்.



எங்கள் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு சென்று ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை பயின்று வருகின்றனர். ஆனால் எங்கள் ஊரிலிருந்து பள்ளியானது சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

பள்ளி செல்லும் எங்களது குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல் பள்ளத்திலும், கரடு முரடான பாதைகளிலும் பயணித்து தினமும் பள்ளி சென்று வருகின்றனர். 

அவர்கள், தினமும் இவ்வாறு நடந்து செல்வதால் உடல்நிலை சரியில்லாமல் போவதும் அடிக்கடி நடக்கிறது. இதனால் அவர்களது பள்ளி படிப்பு பாதிக்கப்படுகிறது.

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களது பகுதிக்கு வாகன வசதி செய்துதர வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...