கோவை சின்னாம்பதி அருகே பிடிபட்ட 13 அடி ராஜநாகம் - பத்திரமாக பிடித்து அடர் வனப்பகுதியில் விடப்பட்டது!

கோவை சின்னாம்பதி கிராமம் கொடாம்மேடு பகுதியில் பொதுமக்கள் நடந்து சென்றபோது 13 அடி கொண்ட ராஜநாகத்தை கண்டு அதிர்ச்சியடைந்து வனத்துறை மற்றும் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பாம்புபிடி வீரர்கள், பாம்பை பத்திரமாக பிடித்து சென்று அடர் வனப்பகுதியில் விடுவித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் சாலையோரத்தில் இருந்த 13 அடி ராஜநாகத்தை பாம்புபிடி வீரர்கள் பத்திரமாக பிடித்து அடர் வனப்பகுதியில் விட்டனர்.

கோடை காலம் நெருங்கி வருவதால், அடர் வனப்பகுதிகளில் இருந்து வன விலங்குகள் நீரோடைகள் மற்றும் வன எல்லைகளுக்கு நீர் மற்றும் உணவு தேடி வரத் துவங்கி உள்ளது.

இந்நிலையில் தமிழக - கேரளா எல்லையான வாளையாறு அருகே அமைந்துள்ள கொடாம்மேடு, சின்னாம்பதி மலை கிராமத்திற்கு செல்லும் வழி சாலையில் சுமார் 13 அடி நீளமுள்ள ராஜநாகம் செல்வதை அப்பகுதி விவசாயிகள் பார்த்துள்ளனர்.

இது தொடர்பாக உடனடியாக மதுக்கரை வனத்துறை மற்றும் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.



விரைந்து வந்த பாம்பு பிடி வீரர்கள் விஜேஷ் மற்றும் ராஜேஷ் சாலை ஓரத்தில் இருந்த 13 அடி ராஜநாகத்தை போராடி பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து பிடிபட்ட ராஜநாகத்தை வாளையாறு அடர் வனப்பகுதியில் விடுவித்தனர். மிகவும் அடர்வனப்பகுதியில் வாழ்விடத்தை கொண்டுள்ள அதிக விஷத் தன்மையுடைய ராஜநாகம் விவசாய தோட்டத்தின் அருகே கண்டறியப்பட்டது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு பகுதியில் மட்டுமே ராஜநாகம் வெளியே வந்து பிடிக்கப்பட்டு அடர் வனப்பகுதியில் விடுவிக்கப்படுவதாக பாம்பு பிடி வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...