உடுமலை அருகே குடிமங்கலம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு - அமைச்சர் சாமிநாதன் ஆய்வு

உடுமலை அடுத்த குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட 23 ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.

உடுமலை அடுத்த குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெதப்பம்பட்டி, கொங்கல் நகரம், மூங்கில் தொழவு, அனிக்கடவு, இலுப்ப நகரம், கோட்டமங்கலம், குறுஞ்சேரி, புக்குளம் உள்ளிட்ட 23 ஊராட்சிகளில் கடந்த சில வாரங்களாகவே குடிநீர் தட்டுப்பாடு காரணமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு சில இடங்களில் குடிநீர் முறையாக வழங்க கோரி அவ்வப்போது போராட்டங்களும் நடைபெற்று வந்தது.



இதனிடையே குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பம்பட்டியில், குடிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட 23 கிராம மக்கள் கலந்து கொண்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.



தமிழக செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் பல்வேறு ஊராட்சி பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் தங்களது ஊராட்சிகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனவும் முறையாக குடிநீர் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.



மேலும் குடிமங்கலம் ஒன்றியத்தில் தடுப்பணைகள் கட்டியது முறைகேடு மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முறையாக நடைபெறவில்லை என விவசாயிகள் சங்கம் சார்பில் அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.



இதன் பின்னர் அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், கடந்த சில வாரங்களாக தண்ணீர் முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படும் நிலையில், இன்று குடிநீர் வடிகால் அதிகாரிகள் மற்றும் குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முறையாக கிராம மக்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது, என்றார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வினித் மற்றும் குடிமங்கலம் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், குடிமங்கலம் வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...