ரயில்பாதையில் கண்காணிப்பு கேமிராக்கள் - யானை இறப்பைத் தடுக்க வனத்துறை தீவிரம்!

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், அப்பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவதற்கான ஆய்வுப் பணிகளை மதுக்கரை வனத்துறையினர் மேற்கொண்டனர்.



கோவை: கோவையில் இருந்து மதுக்கரை வழியாக பாலக்காடு மற்றும் கேரள மாநிலத்திற்கு செல்லும் ரயில்கள் மதுக்கரைக்கு உட்பட்ட சோளக்கரை வணப்பகுதியில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது.

இந்த வனப்பகுதிக்குள் இருக்கும் ரயில் பாதையை கடக்கும் போது சில சமயங்களில் ரயிலில் அடிபட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழக்க நேரிடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்த வனப்பகுதியில் இருந்த இரண்டு யானைகள் ரயில் பாதையை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தன.

இதனால் வன விலங்குகள் ரயிலில் அடிபட்டு இறப்பதை தடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து ரயில் பாதைக்கு வராமல் யானைகள் மற்றும் வன விலங்குகள் கடந்து செல்லும் வகையில் பாலம் அமைத்து பாதை ஏற்படுத்தி தரவும் ரயில் பாதைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தவும் ரயில்வே துறை முடிவு செய்தது.



அதற்காக யானைகள் அடிக்கடி கடக்கும் பகுதியான சோளக்கரை பகுதியில் ரயில் பாலம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு பாலம் கட்டும் துவங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.



இந்த நிலையிலே சோளக்கரை வனப்பகுதியில் உள்ள ரயில் பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்காக வந்துள்ள ரயில்வே தொழில்நுட்ப துறை அதிகாரிகள், மதுக்கரை வனப்பகுதி ரேஞ்சர் சந்தியா தலைமையில் அந்த பகுதிக்கு சென்று எங்கெங்கு கேமராக்கள் பொறுத்த வேண்டும் என்று பார்வையிட்டனர்.

விரைவில் சோளக்கரை வனப்பகுதியில் உள்ள ரயில் பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துவங்க உள்ளது. இந்த பணி நிறைவடையும் நிலையில் யானை உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு விபத்தை தவிர்க்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...