கோவையில் இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பு - பிக்பாக்கெட் கொள்ளையன் கைது

கோவையில் பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த பிக்பாக்கெட் திருடன் செல்வபுரத்தை சேர்ந்த ஸ்டாலின் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் பகுதி சேர்ந்தவர் இளம் பெண் யாமினி (வயது22). இவர் காந்திபுரத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார்.

இந்த நிலையில் அவர் மேட்டுப்பாளையம் பேருந்தில் சென்றுள்ளார். அப்பொழுது அவரின் பேக்கை யாரோ இழுப்பது போன்று உணர்ந்துள்ளார்.

பேருந்தில் இருந்து ஒரு நபர் அவசர அவசரமாக இறங்கி சென்றிருக்கின்றார். அந்த பெண் தனது பேக்கை பார்த்த பொழுது அதில் வைத்திருந்த செல்போன் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அருகாமையில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த பொழுது, செல்வபுரத்தை சேர்ந்த ஸ்டாலின் என்ற நபர் செல்போனை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த நபரை கைது செய்த போலீசார் வழிப்பறி செய்யப்பட்ட செல்போனை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

இவர் மீது உக்கடம் காவல் நிலையத்தில் ஏற்கனவே குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...