கோவை ரேஸ்கோர்ஸில் குழாய் உடைப்பு - வெளியேறும் தண்ணீரால் பொதுமக்கள் அவதி

கோவை ரேஸ்கோர்ஸ் சாலைப்பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், தண்ணீர் வெளியேறி வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.



கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி என்பது கோவை மாநகரின் முக்கியமான பகுதியாகும். இப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு உட்பட அரசு அலுவலர்களின் குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சாலை புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதைகள் விரிவாக்கப்பட்டு உடற்பயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் வசதிகள் செய்யப்பட்டன. பல்வேறு மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதனால் தற்போது பெரும்பாலான பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் அங்கு நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். பொழுதுபோக்கிற்காகவும் பல்வேறு பொதுமக்கள் அங்கு வருகை புரிகின்றனர். மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளும் அப்பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் அப்பகுதியில் மரங்கள் மற்றும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால், அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது.



குழாய் உடைப்பிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடித்து வெளியேறி வீணாகி வருவதால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதனை சரி செய்யும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுததுள்ளனர். கோடைகாலத்தில் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், இது போன்ற பைப் உடைப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...