தாராபுரம் அரசு மருத்துவமனையில் நீதிபதிகள் திடீர் ஆய்வு - போக்சோ வழக்கு சோதனை குறித்து விசாரணை!

தாராபுரம் அரசு மருத்துவமனையில் இன்றைய தினம் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பாலு மற்றும் தாராபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.பாபு ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவர்களிடம் போக்சோ வழக்கில் சிறார்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகள் குறித்து கேட்டறிந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட மகிளா நீதிபதிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தாராபுரம் அரசு மருத்துவமனையில் திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பாலு மற்றும் தாராபுரம் குற்றவியல் நடுவர் எஸ்.பாபு ஆகியோர் இன்று திடீரென அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.



அப்போது தலைமை மருத்துவர் சிவபாலன் மற்றும் குழுவினருடன் மருத்துவமனையில் பெண்கள் பொது வார்டு, பிரசவ வார்டு, குழந்தைகள் பிரசவ வார்டு, ஆப்ரேசன் தியேட்டர் உள்ளிட்ட பகுதி அறைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.



பின்னர் நீதிபதிகள் மருத்துவர்களிடம் தாராபுரம் மகளிர் காவல் நிலையத்துக்கு வரும் போக்சோ வழக்குகள் குறித்தும் போலீசார் குற்றவாளிகளை பரிசோதனைக்கு வரும் போது குறிப்பாக 18 வயதுக்கு குறைவான சிறார் குழந்தைகளுக்கு செய்யப்படும் மருத்துவ பரிசோதனைகள் குறித்து மருத்துவர்கள் குழுவினரிடம் கேட்டறிந்தனர்.



இந்த ஆய்வின் போது, தாராபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவபாலன், மருத்துவர்கள் சத்தியராஜ் மற்றும் பெரியசாமி, குற்றவியல் காவல் ஆய்வாளர் அன்புச் செல்வி, உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் பலரும் உடனிருந்தனர்.

அப்போது போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஞானவேல் தலைமையில் அரசு மருத்துவமனை நுழைவாயில் முன்பு 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...