தாராபுரம் அருகே வாட்ஸ் ஆப் கேட்டால் கஞ்சா ஹோம் டெலிவரி! - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்!

தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் வாகன சோதனையில் பைக்கில் கஞ்சா கடத்திச் சென்ற இருவரை கைது செய்து நடத்திய விசாரணையில் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் மூலம் ஆர்டர் செய்துவிட்டு, கூகுள் பேவில் பணம் செலுத்தினால் கஞ்சாவை ஹோம் டெலிவரி செய்து வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.



ஒட்டன்சத்திரம் - திருப்பூர் புறவழிச்சாலையில் குண்டடம் - திருப்பூர் பிரிவில் உள்ள காவல்துறை சோதனை சாவடியில் துணை ஆய்வாளர் பிரதாப் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த நிலையில், சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தபோது பை முழுவதும் கஞ்சா தூள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



உடனடியாக அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.



தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்கள், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்துள்ள கன்னியம்பட்டியை சேர்ந்த பாண்டி(38), மற்றும் சிவகாளை(28) என்பது தெரியவந்தது.



மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 8 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆந்திராவில் இருந்து கிலோ கணக்கில் பார்சல் லாரி சர்வீஸ் மூலம் கஞ்சாவை வாங்கி உசிலம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் உள்ள குடிசை வீடு ஒன்றில் பதுக்கி வைத்துள்ளனர்.

இதனையடுத்து வாட்ஸ் அப் மூலம் வாடிக்கையாளர்கள் மெசேஜ் அனுப்பியவுடன் ஜிபேயில் (GPay) பணத்தைப் பெற்றுக் கொண்டு நேரடியாக யாரும் சந்தேகப்படாத வகையில் இருசக்கர வாகனத்தில் சென்று திருப்பூர், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சப்பளை செய்து வருவதாக குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தூரமாக உள்ள ஊர்களுக்கு ஆள் செல்ல முடியாத கிராம பகுதிகளுக்கும் கூட கொரியர் மூலம் கஞ்சா பொட்டலத்தின் மீது வாசனை திரவியங்கள் அடித்து கஞ்சா வாடை அடிக்காதவாறு பிளாஸ்டிக் கவர்களால் நன்கு சுத்தி கஞ்சா இலைகளை பவுடராக்கி பார்சல் செய்து அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் உசிலம்பட்டியில் இருந்து பல்லடத்தைச் சேர்ந்த வியாபாரி பழைய பாக்கியை நேரில் தருவதாக கூறியதால் இருசக்கர வாகனத்தில் வந்த போது ஒட்டன்சத்திரம் சாலை தாராபுரம் எரகம்பட்டி செக்போஸ்டில் மாட்டிக் கொள்வோம் என்பதற்காக மாற்று வழியில் வந்து குண்டடம் செக் போஸ்டில் மாட்டிக்கொண்டதாக குற்றவாளிகள் போலீஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தாராபுரம் டி.எஸ்.பி தனராஜ் தலைமையில் குண்டடம் போலீசார் குற்றவாளிகளை மேலும் துருவி துருவி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடிக்கடி தாராபுரம் பகுதியில் கஞ்சா கடத்தியவர்கள் கைது செய்யப்படுவது தாராபுரம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...