பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி கோவையில் சாலையில் பாலை கொட்டி ஆர்ப்பாட்டம்!

தமிழக அரசின் ஆவின் பால் கொள்முதல் விலையில் மீதமுள்ள 7 ரூபாயையும் உயர்த்தி வழங்க வலியுறுத்தி கோவை ஆலாந்துறை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள், பாலை தரையில் கொட்டி தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள், பாலை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசின் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பசும்பால் 35 ரூபாய்க்கும், எருமைப்பால் 44 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 10 ரூபாய் உயர்த்தி தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 3 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 7 ரூபாயையும் உயர்த்த வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மாடுகளுக்கான தீவனம், பாலுக்கான உற்பத்தி செலவை ஒப்பிடும்போது தற்போது கொள்முதல் செய்யப்பட்டு வரும் விலை குறைவு என்பதால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.



இதன் ஒரு பகுதியாக இன்று கோவை ஆலாந்துறை பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகள் சங்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பால் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமல்லாமல் மாட்டு தீவனம் மானியம் வழங்கிட வேண்டும், ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டது.



இந்த கோரிக்கையை வலியுறுத்தி கண்டன பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாலை தரையில் கொட்டி தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...