அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.25 லட்சத்திற்கு ஏலம் போன மக்காச்சோளம்!

திருப்பூர், தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கொண்டு வந்த 19000 கிலோ அளவிலான மக்காசோளம், அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட வியாபாரிகளால், ரூ.4.25 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.25 லட்சத்திற்கு மக்கோசோளம் ஏலம் எடுக்கப்பட்டது.

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளான அலங்கியம், தளவாய்பட்டினம், சந்திராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில். , மக்காச்சோளத்தை அறுவடை செய்த விவசாயிகள் அவற்றை காய வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை தாராபுரம் அடுத்த அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

திருப்பூர், திண்டுக்கல், பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மக்காச்சோளத்தை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இவ்வாறு, மொத்தம் 19,000 கிலோ அளவிலான மக்காச்சோளம் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதனை வாங்க திருப்பூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர் அப்போது அதிகபட்சமாக குவிண்டால் 2,211 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 2,202 ரூபாய்க்கும் விலை போனது. இந்த நிலையில் இன்று, மொத்தமாக ரூ.4.25 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம் போனது.

இந்த ஏலத்திற்கான ஏற்பாடுகளை அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் அருள் குமார் செய்திருந்தார்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...