அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.25 லட்சத்திற்கு ஏலம் போன மக்காச்சோளம்!

திருப்பூர், தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கொண்டு வந்த 19000 கிலோ அளவிலான மக்காசோளம், அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட வியாபாரிகளால், ரூ.4.25 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.25 லட்சத்திற்கு மக்கோசோளம் ஏலம் எடுக்கப்பட்டது.

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளான அலங்கியம், தளவாய்பட்டினம், சந்திராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில். , மக்காச்சோளத்தை அறுவடை செய்த விவசாயிகள் அவற்றை காய வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை தாராபுரம் அடுத்த அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

திருப்பூர், திண்டுக்கல், பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மக்காச்சோளத்தை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இவ்வாறு, மொத்தம் 19,000 கிலோ அளவிலான மக்காச்சோளம் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதனை வாங்க திருப்பூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர் அப்போது அதிகபட்சமாக குவிண்டால் 2,211 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 2,202 ரூபாய்க்கும் விலை போனது. இந்த நிலையில் இன்று, மொத்தமாக ரூ.4.25 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம் போனது.

இந்த ஏலத்திற்கான ஏற்பாடுகளை அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் அருள் குமார் செய்திருந்தார்.

Newsletter

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...