பல்லடம் இரும்பு உருக்கு ஆலை விவகாரம் - 3வது நாளாக தொடரும் போராட்டம்!

பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் இரும்பு உருக்காலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது நாளாக 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஒப்பாரி வைத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் இரும்பு உருக்காலைக்கு எதிரான போராட்டம் 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக தனியார் இரும்பு உருக்கு ஆலை இயங்கி வருகிறது.

இந்த ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், முறையாக சட்ட விதிகளைப் பின்பற்றாமல் இந்த ஆலை இயங்கி வருவதாகவும், இந்த ஆலையில் இருந்து வெளியேறும் அதிகப்படியான புகையால் பொதுமக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.



இந்நிலையில் இந்த ஆலைக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்ட உரிமம் வழங்கக் கூடாது என கூறி ஊருக்கு நடுவே பந்தல் அமைத்து ஆலையை மூடக்கோரி மூன்று நாட்களுக்கு அப்பகுதி மக்கள் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

மூன்றாவது நாளான இன்றும் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், ஆலையால் ஏற்படும் பாதிப்புகளை பாடலாக பாடி ஒப்பாரி வைத்து பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலைக்கான உரிமத்தை மீண்டும் வழங்கக் கூடாது எனவும், மீறி உரிமம் வழங்கினால் எங்களது போராட்டம் சாகும் வரை தொடரும் எனவும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...