பல்லடம் இரும்பு உருக்கு ஆலை விவகாரம் - 3வது நாளாக தொடரும் போராட்டம்!

பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் இரும்பு உருக்காலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது நாளாக 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஒப்பாரி வைத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் இரும்பு உருக்காலைக்கு எதிரான போராட்டம் 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக தனியார் இரும்பு உருக்கு ஆலை இயங்கி வருகிறது.

இந்த ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், முறையாக சட்ட விதிகளைப் பின்பற்றாமல் இந்த ஆலை இயங்கி வருவதாகவும், இந்த ஆலையில் இருந்து வெளியேறும் அதிகப்படியான புகையால் பொதுமக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.



இந்நிலையில் இந்த ஆலைக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்ட உரிமம் வழங்கக் கூடாது என கூறி ஊருக்கு நடுவே பந்தல் அமைத்து ஆலையை மூடக்கோரி மூன்று நாட்களுக்கு அப்பகுதி மக்கள் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

மூன்றாவது நாளான இன்றும் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், ஆலையால் ஏற்படும் பாதிப்புகளை பாடலாக பாடி ஒப்பாரி வைத்து பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலைக்கான உரிமத்தை மீண்டும் வழங்கக் கூடாது எனவும், மீறி உரிமம் வழங்கினால் எங்களது போராட்டம் சாகும் வரை தொடரும் எனவும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...