கோவையில் பெண்களுக்கான இன்னர்வீல் கிளப் அமைப்பு தொடக்கம்-புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!

கோவையில் பெண்கள் மட்டும் உறுப்பினர்களாக கொண்ட இன்னர் வீல் கிளப் கோயமுத்தூர் சினெர்ஜி எனும் புதிய அமைப்பு துவங்கப்பட்டது. இந்த விழாவில் அமைப்பிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.


கோவை: கோவையில் பெண்கள் மட்டும் உறுப்பினர்களாக கொண்ட இன்னர் வீல் கிளப் கோயமுத்தூர் சினெர்ஜி எனும் புதிய அமைப்பு துவங்கப்பட்டது.

கோவையில் இன்னர் வீல் மேற்கு பரிந்துரைப்படி இன்னர் வீல் கோயமுத்தூர் சினெர்ஜி எனும் புதிய அமைப்பு துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தலைவர் ஆஷா சுனில், மாவட்ட இ.எஸ்.ஓ.சிந்து சேது ஆகியோர் கலந்து கொண்டனர்.



26 பெண் உறுப்பினர்களை கொண்டு செயல்பட உள்ள இந்த அமைப்பின் தலைவராக பிரியா ராம்குமார், செயலாளராக அசோக் சங்கீதா ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர். பல்வேறு சேவை திட்டங்களை முன்னெடுத்து செயல்பட, இன்னர்வீல் கோயமுத்தூர் சினெர்ஜி அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உறுதி எடுத்து கொண்டனர்.



முதல் சேவை திட்டமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தற்காப்பு கலையான களரி, அடிமுறை, கராத்தே ஆகிய பயிற்சிகளை வேர்ல்டு களரி, அடிமுறை ஃபெடரேஷன் மற்றும் அட்வென்சர் மார்ஷியல் ஆர்ட் அகாடமி ஆகியோருடன் இணைந்து இலவசமாக ஒரு வருடம் பயிற்சி அளிக்க உள்ளதாக புதிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.



இந்நிகழ்ச்சியில் இன்னர் வீல் அமைப்பின் மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...