ஆனைக்கட்டியில் பழங்குடி மக்கள் இசைக்கு நடனமாடிய வடமாநில பழங்குடி மாணவர்கள்!

கோவை பாரதியார் பல்கலை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற பழங்குடியின இளைஞர் பரிமாற்ற சிறப்பு முகாமில் கலந்து கொண்ட வடமாநில பழங்குடியின மாணவர்கள், அப்பகுதி மக்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தனர்.


கோவை: ஆனைக்கட்டி அடுத்த கொண்டனூரில் அரசாங்க பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடமாநில பழங்குடியின மாணவர்கள், அப்பகுதி மக்களுடன் இணைந்து நடனமாடினர்.

இந்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில், வடமாநில பழங்குடி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர், கோவையில் நடைபெறும் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை பாரதியார் பல்கலைக்கழகம், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ் நலப்பணித் திட்டம் சார்பில், ‘பழங்குடியின இளைஞர் பரிமாற்ற சிறப்பு முகாம்' நடந்தது.



இம்முகாமில் பீகார், சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் 220 பேர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து ஆனைக்கட்டி கொண்டனூரில் அரசாங்க பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியிலும் அவர்கள் பங்கேற்றனர்.



அப்போது வடமாநில பழங்குடியின மாணவர்களுக்கு பேண்டு வாத்தியம் முழங்க வெகு விமரிசையாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ஆனைக்கட்டி பழங்குடி மக்களின் பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.



பழமை மாறாத பழங்குடியின மக்களின் வாழ்வியல் சூழலை பிற மாநில பழங்குடி மாணவர்களும் அறிந்துக் கொண்டனர். இதை தொடர்ந்து பழங்குடியின மக்களின் பாரம்பரிய கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் பழங்குடியின மாணவர்கள் தங்கள் மாநிலத்தின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நடனமாடி அசத்தினர். இதில் பழங்குடிகள் இசை ஆரம்பித்தவுடன்,வடமாநில பழங்குடி மாணவர்கள் உற்சாகமாக நடனமாடினர்.

தமிழ் பழங்குடியின மக்கள், வடமாநில பழங்குடியின மக்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து நடனமாடியது பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...