கோவை அருகே ரூ.73 லட்சம் மதிப்புள்ள வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை!

கோவை பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட கணுவாயில் ரூ.73 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் ஊராட்சித்தலைவர் ரத்தினம் பி.எஸ்.எம் மருதாசலம் தலைமையில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.


கோவை: பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட கணுவாயில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

கோவை பன்னிமடை ஊராட்சி கணுவாய் பகுதியில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனின் நிதியில் ரூ.18 லட்சத்தி 60ஆயிரம் மதிப்பில் கணுவாய் பேருந்து நிறுத்தம் அருகே கலையரங்கம் அமைத்தல், ஊராட்சி பொதுநிதியில் ரூ.27 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் 10வது வார்டில் வடிகால் பணிகள் அமைத்தல்



11 மற்றும் 12வது வார்டுகளில் ரூ.7 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் வடிகால் மற்றும் சாலை பணிகள், 13வது வார்டில் ரூ.14 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் சாலைபணிகள் மற்றும் கே.என்.ஜி.புதூர் 15வது வார்டில் ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் சாலைப்பணிகள் என மொத்தம் ரூ.73 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.



ஊராட்சி தலைவர் ரத்தினம் பி.எஸ்.எம் மருதாசலம் தலைமை தாங்கினார். ஊராட்சித் துணைத்தலைவர் அருள்குமார், ஒன்றிய கவுன்சிலர் திருநாவுக்கரசு, மாமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பன்னிமடை வார்டு உறுப்பினர்கள் சாந்தி, ராமச்சந்திரன், கவிதா, கோபால்சாமி, மாரித்தாய், விஜயலட்சுமி, சிவக்குமார், லதா, ஜெயமணி, சாந்தி, முருகேஷ், வாசுமணி, கணுவாய் ஊர் முக்கிய பிரமுகர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...