தாராபுரம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து - 22 பேர் காயம்!

தாராபுரம் அடுத்த சோமனூத்து பகுதியில் சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் சத்திரம் பகுதியில் கூலி வேலைக்குச் சென்று திரும்பிய சிக்னாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 22பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி.


திருப்பூர்: தாராபுரம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கூலித் தொழிலாளர்கள் 22 பேர் காயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள தளவாய் பட்டிணம் பஞ்சாயத்துக்குட்பட்ட சிக்னாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சத்திரம் பகுதிக்கு வெங்காயம் அறுவடைக்கு சென்று விட்டு மாலை சரக்கு வாகனத்தில் வீடு திரும்பினர்.

இவர்கள் பயணித்த சரக்கு வாகனம் சோமனூத்து என்ற இடத்தில் வந்த போது, பின்பக்க டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய வாகனம் சாலையில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த லட்சுமி, முருகம்மாள், ஈஸ்வரி, மாரியம்மாள், காளியம்மாள் உட்பட 18 பேருக்கு லேசான காயமும், 4 பேருக்கு பலத்த காயமும் ஏற்பட்டது.



பலத்த காயமடைந்தவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மீதமுள்ளவர்கள் தாராபுரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சாலை விபத்து குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...