கோவை விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பு பணி தீவிரம்

கோவை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஓடுபாதை புனரமைப்பு பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளதால் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மீண்டும் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் தெரிவித்துள்ளார்.



கோவை: பாதுகாப்பான விமான போக்குவரத்துக்கு ஓடுபாதை பராமரிப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு முறை விமானங்கள் புறப்படும்போதும், தரையிறங்கும்போதும் விமான ஓடுபாதை சேதமடையும். இதை கருத்தில் கொண்டு விமான நிலைய ஓடுபாதை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனரமைப்பு செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி, கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை புனரமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. கோவையில் பகல் நேரங்களில் மட்டுமின்றி நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களிலும் விமான போக்குவரத்து உள்ளது.

புனரமைப்பு பணிகள் இரவு நேரங்களில் மட்டும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டதால் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே விமானங்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் மழை, பனி உள்ளிட்ட காரணங்களால் பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது இப்பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளன.

இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் கூறுகையில், “ஓடுபாதை புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது மிகவும் சவாலானது. குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் தொடங்கி பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்படும்.

இப்பணிகள் தற்போது இறுதிகட்டத்தை அடைந்துள்ளன. இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும். இதனால் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மீண்டும் விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட தொடங்கும்” என்றார்.

இதைத்தொடர்ந்து, கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் விமானம் அதிகாலை 4.15 மணிக்கு தரையிறங்கி, 5 மணியளவில் ஷார்ஜா புறப்பட்டு செல்வது வழக்கம். இந்த விமான சேவை தற்போது காலை 6 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஓடுபாதை பணி நிறைவடையும் நிலையில் உள்ளதால் ஏப்ரல் முதல் மீண்டும் ஷார்ஜா விமானம் அதிகாலை 4.15 மணிக்கு தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...