கோவையில் நாய்கள் இனப்பெருக்க மையத்தில் தீவிபத்து - 10க்கும் மேற்பட்ட நாய்கள் பலி

கோவை வடவள்ளியில் பாபு என்பவர் உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பின்றி நாய்கள் இனப்பெருக்க மையத்தை நடத்தி வந்ததாகவும், தீ விபத்து ஏற்பட்டபோது அங்கு யாரும் இல்லாததால் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்து விட்டதாகவும், பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை வடவள்ளி அடுத்த வீரகேரளம், சிவகாமி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த நாய்கள் இனப்பெருக்கு மையத்தில் மாலை திடிரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் கூண்டில் இருந்து வெளியே வர முடியாமல் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளேயே சிக்கி தீயில் கருகி உயிரிழந்தன.



வனவிலங்கு நல ஆர்வலர்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள் அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரே ஒரு நாயை மட்டும் மீட்டு அதற்கு சிகிச்சை அளித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக தேசிய விலங்குகள் நல வாரிய பிரதிநிதியான பிரதீப் பிரபாகரன் என்பவர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.



அதில் பாபு என்பவர் உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பின்றி நாய்கள் இனப்பெருக்க மையத்தை நடத்தி வந்ததாகவும், தீ விபத்து ஏற்பட்டபோது அங்கு யாரும் இல்லாததால் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்து விட்டதாகவும், எனவே அலட்சியமாகவும் அஜாக்கிரதையாகவும் செயல்பட்ட பாபு என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, நாய்கள் இனப்பெருக்க மைய உரிமையாளர் பாபு என்பவரை தேடி வருகின்றனர். நாய்கள் இனப்பெருக்க மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளியேற முடியாமல் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கூண்டிலேயே கருகி உயிரிழந்த சம்பவம் விலங்கு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...