பல்லடம் அருகே வரதட்சணை கேட்டு மனைவியின் குடும்பத்தாரை தாக்கிய கணவர்! - பரபரப்பு வீடியோ

பல்லடம் அருகே ஓராண்டு முன்பு விஜயன் - மோகனப்பிரியா திருமணம் செய்துக் கொண்டனர். இந்நிலையில் வரதட்சனை கேட்டு மோகனப்பிரியாவின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்து, அவரது குடும்பத்தாரை விஜயன் தாக்கிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பல்லடம் அருகே வரதட்சணை கேட்டு நள்ளிரவில் அடியாட்களுடன் மனைவியின் குடும்பத்தாரை இளைஞர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புக்கிலிபாளையத்தை சேர்ந்தவர் விஜயன். இவர் மங்களம் பகுதியில் ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார்.



இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகள் மோகனப்பிரியாவும், பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.



திருமணம் ஆன நான்கு மாதத்திலேயே விஜயன் மோகனப்பிரியாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், இது குறித்து பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் விஜயன் மீது மோகனப்பிரியா புகாரும் அளித்துள்ளார்.



பல்லடம் மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நேற்றிரவு அடியாட்களுடன் வந்த விஜயன், மோகனப்பிரியாவின் வீட்டில் புகுந்து அவரது குடும்பத்தாரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த மோகனப்பிரியாவின் தந்தை மூர்த்தி மற்றும் அவரது தாய் ஆகியோர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோகனப்பிரியாவின் வீட்டில் புகுந்து விஜயன் தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காதல் திருமணம் செய்த ஒரு வருடத்திலேயே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், விஜயன் மீது கடும் நடவடிக்கை எடுத்து தனது மகளின் வாழ்க்கையை காப்பாற்றுமாறும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் மோகனப்பிரியாவின் தந்தை கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...