பல்லடம் அருகே தாவரவியல் பூங்காவிற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு!

பல்லடம் அடுத்த கொத்துமுட்டிபாளையம் கிராமத்தில் உள்ள முல்லைவனம் என்ற தாவரவியல் பூங்காவிற்கு மர்ம நபர்கள் சிலர் தீவைத்த நிலையில், தீ மளமளவென பரவியதில் அங்கிருந்த 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் தீயில் கருகி சேதமடைந்தன.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள தாவரவியல் பூங்காவிற்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அடுத்த இச்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது கொத்துமுட்டிபாளையம் கிராமம்.



இந்த கிராமத்தில், 8 ஏக்கர் பரப்பளவில் சுமார் 7,000 மரக்கன்றுகள் ஊர் மக்களால் நடப்பட்டு முல்லைவனம் என்ற தாவரவியல் பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது.

இங்கு வேம்பு, புங்கன், பூவரசன், அத்தி, நெல்லி போன்ற பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு, சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை 5 மணி அளவில் இந்த பூங்காவிற்கு வந்த மர்மநபர்கள் இரண்டு பேர் முல்லைவனம் பகுதியில் காய்ந்த புற்களுக்கு தீ வைத்துள்ளனர்.



மர்மநபர்கள் தீ வைக்கும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.



புற்களுக்கு வைக்கப்பட்ட தீ மளமளவென பரவியதால் ஐநூறுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் தீயில் எரிந்து நாசமானது.

இதனை கண்ட அப்பகுதி மக்களே இணைந்து, தண்ணீர் ஊற்றிய நிலையில், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதேபோன்று மர்ம நபர்கள் வனப்பகுதிக்கு தீ வைத்ததாக கூறியுள்ள அப்பகுதி மக்கள், 500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை சேதப்படுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...