தமிழ்நாடு பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?

தமிழக அரசு 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், வைகோவும், கமல்ஹாசனும், தமிழகம் இந்தியாவிற்கு முன்னோடியாக இருப்பதாகவும், பழனிசாமி, டிடிவி தினகரனும், மக்களை ஏமாற்றும் வகையிலான பட்ஜெட் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.



சென்னை: தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவாகவும், விமர்சித்தும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர்:



தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை என அறிவித்து விட்டு, தகுதியானவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும் என பட்ஜெட்டில் கூறியுள்ளனர். ஆனால், என்ன தகுதி என்பதை வெளியிடவில்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் மின்மினிப்பூச்சி போலத்தான், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வெளிச்சம் தராது. கானல் நீர் தாகம் தீர்க்காது.

வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்:



மத்திய அரசைக் காட்டிலும், நிதி பற்றாக்குறையைக் குறைத்திருப்பது திமுக அரசின் திறன்மிக்க நிதி மேலாண்மைக்குச் சான்று. இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக முன்னேற்றப் பாதையில் நடைபோடுவதை இந்த நிதிநிலை அறிக்கை உறுதி செய்துள்ளது.

ராமதாஸ், பாமக நிறுவனர்:



ரூ.1000 மகளிர் உரிமைத் திட்டம், காலை உணவு விரிவாக்க திட்டம், வளமிகு வட்டாரங்கள் ஆகிய திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.77,000 கோடியில் 14,500 மெகாவாட் நீரேற்று மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த திட்டங்கள் எப்போது செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.

டி.டி.வி.தினகரன், அமமுக பொதுச் செயலாளர்:



தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் தகுதியான பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது தகுதியை உள்ளே சேர்த்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல்ஹாசன், மக்கள் நீதிமய்யம் தலைவர்:



இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் புரட்சிகரமான திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத் தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...