கோவை அருகே ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு விழா

கோவை துடியலூரை அடுத்த குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆனந்த பொன்னுசாமி நகர் பகுதியில் தார் சாலை மற்றும் இதர பணிகளை செய்த ஊராட்சித் தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றியக் கவுன்சிலர், ஊராட்சித் துணைத் தலைவர் ஆகியோருக்கு நலச்சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.



கோவை: கோவை அருகே அடிப்படை வசதி பணிகளை செய்த ஊராட்சி தலைவர் ரவி உள்ளிட்டோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆனந்த் பொன்னுசாமி நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஊராட்சி சார்பில் மாநில நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ.4.50 லட்சம் மதிப்பில் தார் சாலையும், 15வது நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் சாலை பணிகள் மற்றும் இதர பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்பணிகளைச் செய்து கொடுத்த குருடம்பாளையம் ஊராட்சித் தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், ஒன்றியக் கவுன்சிலர் ஆறுச்சாமி, ஊராட்சித் துணைத் தலைவர் வசந்தாமணி விஸ்வநாதன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆன்ந்த் பொன்னுசாமி நகர் நலச்சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.



இதில் அப்பகுதியில் போடப்பட்டுள்ள புதிய தார்ச்சாலையினை ஊராட்சித் தலைவர் ரவி ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



தொடர்ந்து நடைபெற்ற விழாவில் ஊராட்சித் தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், ஒன்றியக் கவுன்சிலர் வேலுச்சாமி, ஊராட்சித் துணைத் தலைவர் வசந்தாமணி விஸ்வநாதன் ஆகியோருக்கு நலச்சங்கம் சார்பில் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஊராட்சித் தலைவர் ரவி, இப்பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஊராட்சி தயாராக இருப்பதாக தெரிவித்தார்.



மேலும் இப்பகுதியில் உள்ள பூங்காவிற்கு தேவையான குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களை விரைவில் அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

Newsletter

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...