சாதி சான்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோவை ஆட்சியரிடம் குரும்பா சங்கத்தினர் மனு!

குரும்பா சமூக மக்கள் கல்வி, வேலைவாய்ப்பை பெற குரும்பா என்ற சாதி சான்று வழங்க வேண்டும் எனவும், ஆடு வளர்ப்பு நல வாரியம் அமைக்கவும், தங்கள் சமுதாய மக்கள் அரசியல் அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட குரும்பா சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தங்கள் சமுதாய மக்களின் வேலைவாய்ப்பு பெற, கல்வி பெற, தங்கள் சமுதாய மக்களுக்கு குருமன்ஸ் என்ற பழங்குடியின சாதிசான்று வழங்க வேண்டும்.



தங்கள் குலத்தொழிலான ஆடு வளர்த்தல் தொழில் மேம்பட தமிழ்நாடு அரசு ஆடு வளர்ப்பு நல வாரியம் அமைத்து, அதன் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியை தங்கள் சமுதாய மக்களுக்கே கொடுக்க வேண்டும்.

இயற்கை, மற்றும் விபத்து போன்ற காரணங்களால் ஆடுகள் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதால், தேவையான காப்பீடு மற்றும் ஆடு வளர்க்கும் தொழிலை காப்பாற்ற தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து தர வேண்டும்.

அரசியல் அங்கீகாரம் பெற எங்கள் இனத்திற்குரிய பிரதிநிதித்துவம் பெற இட ஒதுக்கீட்டில் தங்கள் குரும்ப இனத்திற்கும் உள் ஒதுக்கீடு வழங்கி அரசியல் அங்கீகாரம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு இச்சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் கல்பனா வேலுச்சாமி தலைமையில் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...