கோவையில் அடுத்தடுத்து 8 கடைகளில் கொள்ளை - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

கோவை எட்டிமடை கடைத்தெருவில் உள்ள அடுத்தடுத்து 8 கடைகளின் பூட்டை உடைத்து பணம், மற்றும் சிசிடிவி ஹார்டுடிஸ்க்குகளை திருடிச் சென்ற மர்ம கும்பலை க.க.சாவடி போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


கோவை: கோவை க.க.சாவடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எட்டிமடை பகுதியில் உள்ள கடைத்தெருவில் அடுத்தடுத்து 8 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பணம் மற்றும் 3 கடைகளில் இருந்த சிசிடிவி பதிவு ஹார்டிஸ்க்குகளை திருடிச் சென்றுள்ளனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், எட்டிமடை பகுதியில் உள்ள எதிர் எதிரே அமைந்துள்ள 2 வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் பேக்கரி, போட்டோ ஸ்டுடியோ, செல்போன் கடை, ஹார்வேர்ஸ், சலூன், மளிகை கடை, பேன்ஸி கடை என அடுத்தடுத்து 8 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ.45 ஆயிரம் பணம் மற்றும் சிசிடி ஹார்டுடிஸ்க்குகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் கடைகளில் பதிவான கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். மேலும், இந்த திருட்டு சம்பவங்கள் அதிகாலை சுமார் காலை 4 மணி முதல் 5 மணிக்குள் நடத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டிமடை பகுதியில் அடுத்தடுத்து 8 கடைகளில் கைவரிசை காட்டிய மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொடர் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...