மகளிர் உதவித்தொகையை முதலில் முன்மொழிந்தது மக்கள் நீதி மய்யம் தான்..! - மாநில பிரச்சார செயலாளர் அனுஷா ரவி பெருமிதம்!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்மொழிந்த மெட்ரோ, சிறை மைதானத்தில் செம்மொழி பூங்கா மற்றும் மகளிருக்கு மாதாந்திர உதவித்தொகை ஆகிய திட்டங்களை தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதை வரவேற்கிறோம் என மாநில பிரச்சார செயலாளர் அனுஷா ரவி தெரிவித்துள்ளார்.


கோவை: மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகை திட்டத்தை முதலில் முன்மொழிந்தது மக்கள் நீதி மய்யம் கட்சி தான் என அக்கட்சியின் மாநில பிரச்சார செயலாளர் அனுஷா ரவி தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் 2023 குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பிரச்சார செயலாளர் அனுஷா ரவி சிம்ப்ளிசிட்டியிடம் பேசியதாவது,

எங்கள் தலைவர் கமல்ஹாசன் கூறியது போல், மகளிருக்கான உரிமைத்தொகை திட்டத்தை அரசியல் களத்திற்கு கொண்டு வந்தது மக்கள் நீதி மய்யம் தான். பெண்கள் அதிகாரம் மற்றும் மேம்பாடு என்பது மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

மேலும் தமிழக அரசு மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பெண் குடும்பத் தலைவர்களுக்கு நாங்கள் 3000 ரூபாய் தருவதாக உறுதியளித்திருந்தோம். ஆனால் இது ஒரு நல்ல தொடக்கம். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள மெட்ரோ திட்டம், டெக் சிட்டி, காந்திபுரத்தில் உள்ள சிறை வளாகத்திற்கு பதிலாக செம்மொழி பூங்கா போன்றவை கோவைக்கு நல்ல வளர்ச்சி அடிப்படையிலான திட்டங்கள்.

5 ஆண்டுகளுக்கும் மேலாக மோசமான சாலைகளால் மக்கள் போராடி வரும் நிலையில், கோவையில் சில பகுதிகளில் சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. மெட்ரோ திட்டமும் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த பட்ஜெட்டில் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் நல்ல கலவையாக உள்ளது.

அதேநேரம் வருவாய் பற்றாக்குறையை குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் சொல்லப்பட்ட காலக்கெடுவிற்குள் தமிழக அரசு பற்றாக்குறையை சரி செய்யும் என நம்புகிறோம். கோயம்புத்தூர் நகரத்தில் உள்ள அனைத்து கல்வித் தரத்துடன் பெரிதும் பயன்பெறும் ஒன்று என்றால் அது டெக் சிட்டி திட்டம் தான். அதுகுறித்த விவரங்களை அறிய காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...