கோவையில் பிரபல அரிசி கடத்தல் வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

கோவை உக்கடத்தில் ஜபருல்லா என்பவருக்கு சொந்தமான குடோனில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2,250கிலோ ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் கைதான நிஜாமூதின் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.


கோவை: உக்கடம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2டன் ரேசன் அரிசியை குடிமைப் பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை உக்கடம் ஜிஎம் நகரில் ஜபருல்லா என்பவருக்கு சொந்தமான குடோனிலிருந்து சரக்கு வாகனம் மூலம் ரேஷன் அரிசியை கள்ளத்தனமாக கேரளாவிற்கு கடத்தப்படுவதாக பொள்ளாச்சி, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் விவேகானந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் குடோனில் சோதனை செய்து போது, 45 கிலோ வீதம் 50 மூட்டைகளில் சுமார் 2,250 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரியவந்தது. ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தின் உரிமையாளரான போத்தனூர், திருமறை நகரை சேர்ந்த நிஜாம் (எ) நிஜாமூதீன் என்பவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை, கூடுதல் இயக்குநர் அருண் உத்தரவின் பேரில் கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி பரிந்துரையின்படி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், நிஜாமுதீனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆணையை வழங்கினார்.

அதன்படி இன்று கோவை மத்திய சிறையில் உள்ள நிஜாமுதீனுக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை சார்வு செய்யப்பட்டது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...