பணிக்கொடை வழங்காத தனியார் நிறுவனத்தை கண்டித்து கோவை வட்டாசியர் அலுவலகம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


30 ஆண்டுகளாக பணிக்கொடை வழங்காத தனியார் நிறுவனத்தைக் கண்டித்து அந்நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் கோவை தெற்கு வட்டாசியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவையில் செயல்பட்டு வந்த நவஇந்தியா நிறுவனம், நிர்வாக குறைபாடு காரணமாக மூடப்பட்டது. இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடையை வழங்காததால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து சில ஆண்டுகளுக்கு முன் 50 சதவிகித பணிக்கொடை வழங்கப்பட்டது. அதன் பிறகு வழங்க வேண்டிய மீதம் 50 சதவிகித தொகையை இது வரை வழங்காமல் அந்நிறுவனம் காலம் தாழ்த்துவதை கண்டித்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் இன்று கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நவஇந்தியா நிறுவனத்தில் பணியாற்றிய 180 ஊழியர்களுக்கு இது வரை முழுமையான பணிக்கொடை வழங்கவில்லை. அதில் சில ஊழியர்கள் தற்போது இறந்துவிட்டதால் அந்த தொகையை அவர்களது குடும்பத்தாருக்கு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், எங்களது கோரிக்கைகளை ஏற்று நவஇந்தியா நிறுவனம் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடவுள்ளதாகவும், தொடர்ந்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...