காங்கேயம் அருகே டாஸ்மாக் ஊழியர்கள் மீது மதுப்பிரியர்கள் தாக்குதல் - போலி மது விற்பனை என புகார்!

காங்கேயம் அடுத்த சிவன்மலை அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் 2019 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மதுபாட்டில்களை விற்பனை செய்வது குறித்து கேட்க சென்ற மதுப்பிரியர்கள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் மதுப்பிரியர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே டாஸ்மாக் ஊழியர்களை மதுப்பிரியர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளக்கோவில் அடுத்துள்ள வீரசோழபுரம் பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால்(43). இவர் காங்கேயம் அடுத்த சிவன்மலை - கல்லேரி இடையேயான சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 2 ஆண்டுகளாக சேல்ஸ்மேனாக வேலை செய்து வருகிறார்.



இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் டாஸ்மாக் கடைக்கு வந்த 4 நபர்கள், மது பாட்டில்கள் வாங்கிச் செல்லும் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு நந்தகோபாலிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த 4 பேரும் நந்தகோபால் மற்றும் கடையில் வேலை செய்யும் ஊழியர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய நந்தகோபால் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

*தாக்குதலுக்கான காரணம் என்ன?*



இந்த மதுபான கடையில் வாங்கப்பட்ட மதுபாட்டிலில் 2019 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததாகவும், அந்த மதுபானத்தை குடித்த நபர் மயங்கி விழுந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மதுபான கடைக்கு சென்று மது அருந்தியவர்கள் கேட்டபோது மதுபான கடை ஊழியர்களுக்கும் மது பிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், டாஸ்மாக் பணியாளர்கள் சிலர் உள்ளே இருந்த பீர் பாட்டிலை அவர்களே எடுத்து உடைத்து விட்டு மது அருந்தியவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து காயம் பட்ட மதுப்பிரியர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுபான கடையில் தாக்குதல் நடத்தியதாக நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மது அருந்த சென்றவர்கள் கூறியதாவது, 2019 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மது 3 வருடங்கள் கழித்து எப்படி விற்பனைக்கு வரும் என நாங்கள் கேட்டோம். ஆனால் அதுகுறித்து பதில் சொல்லாமல் தங்களை ஏளனமாக தகாத வார்த்தையால் பேசினர். அப்போது அவர்களே சில பாட்டிலைஎடுத்து உடைத்து விட்டு தங்கள் மீது பழி போட்டனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கொரோனா காலகட்டத்தில் மது கிடைக்காமல் மது பிரியர்கள் தவித்து வந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மதுபானம் எப்படி விற்பனைக்கு வந்தது என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

மதுபாட்டில்களில் 2019 என போடப்பட்டு இருப்பதால், காலியான மதுபாட்டிலில் போலி சரக்குகள் விற்பனையாகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Newsletter

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...