உலக தண்ணீர் தினம் - சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கோவை ஆட்சியர் பங்கேற்பு

கோவை மாவட்டம் கணியூரில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே வரும் காலத்தில் அனைவருக்கும் சுத்தமான தண்ணீர் கொடுப்பதற்கான முயற்சி செய்ய முடியும் என்றார்.


கோவை: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கணியூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கணியூர் ஊராட்சி தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமர் பாடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களிடையே பேசினார்.



அப்போது அவர் பேசியதாவது:

தண்ணீர் பிரச்சனை எதிர்காலத்தில் இல்லாமல் இருக்க அதனை மக்கள் இயக்கமாக கொண்டு சென்று ஒவ்வொருவரும் பங்குதாரராக மாறி தண்ணீரின் முக்கியத்துவம் தெரிந்து கொள்ள வேண்டும்.

திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே வரும் காலத்தில் அனைவருக்கும் சுத்தமான தண்ணீர் கொடுப்பதற்கான முயற்சி செய்ய முடியும். அரசின் பல்வேறு திட்டங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். கோவை மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் ஏற்கனவே கூறிய திட்டங்களுக்கு திட்டமிட்ட தொகை குறைவாக உள்ளது.

இதை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. தண்ணீர் பிரச்சனைக்கு முக்கிய காரணம் திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை. இதை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் நிலத்தடி நீரில் கழிவு நீர் கலப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

மேலும் பொதுமக்கள் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து தூய்மை காவலரிடம் வழங்க வேண்டும். தரம் பிரித்து வழங்கி சரியான மேலாண்மை செய்தால் மட்டுமே அந்த குப்பைகள் நீர்வழி பாதைக்கு வராமல் செய்ய முடியும்.

பிளாஸ்டிக் பொருட்களை முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தமாக தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...