ஜீவசாந்தி அறக்கட்டளை சார்பில் அணையா அடுப்பு - கோவை கரும்புக்கடை பகுதியில் திறப்பு

ஆதரவற்ற ஏழை மக்களின் பசியை போக்கும் விதமாக ஜீவ சாந்தி அறக்கட்டளை சார்பில் கோவையில் அணையா அடுப்பு எனும் சமுதாய சமையற்கூடத்தை தமிழ்ழாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி திறந்து வைத்தார்.



கோவை: கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜீவசாந்தி அறக்கட்டளையினர் ஆதரவில்லாமல் உயிரிழந்த உடல்களை அடக்கம் செய்வது, இலவச ஆம்புலன்ஸ் சேவை என பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர்.

குறிப்பாக, கொரோனா கால நேரங்களில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் சேவை பணியை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

இந்நிலையில், தற்போது மேலும் சேவைப்பணியில் ஈடுபடும் விதமாக அணையா அடுப்பு சமுதாய சமையற்கூடத்தை துவக்கி உள்ளனர்.



ஆதரவற்ற ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் விதமாக கரும்புகடை சேரன் நகர் பகுதியில் துவக்கியுள்ள இதற்கான துவக்க விழா ஜீவசாந்தி அறக்கட்டளையின் தலைவர் சலீம் தலைமையில் நடைபெற்றது.



இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி, பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் நிறுவனர் குருஜி சிவாத்மா, சி.எஸ்.ஐ.ஆயர் சார்லஸ் சாம்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு அணையா அடுப்பு சமையற்கூடத்தை திறந்து வைத்தனர்.



இந்நிகழ்ச்சியில் ஜீவசாந்தி அறக்கட்டளையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...