மறைந்த பலகுரல் கலைஞர் கோவை குணாவின் உடலுக்கு நகைச்சுவை நடிகர்கள் அஞ்சலி!

மறைந்த மிமிக்கிரி கலைஞர் கோவை குணாவின் உடலுக்கு, ஈரோடு மகேஷ், திருப்பாச்சி பெஞ்சமின், பாடகர் மூக்குத்தி முருகன் ஆகியோர், கோவையில் நேரில் அஞ்சலி செலுத்தி விட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.



கோவை: மறைந்த மிமிக்கிரி கலைஞர் கோவை குணாவின் உடலுக்கு நகைச்சுவை நடிகர்கள் மற்றும் சக மிமிக்கிரி கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பலகுரல் கலைஞரான கோவை குணா நேற்று கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து விளாங்குறிச்சி பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.



அதனைத் தொடர்ந்து பல்வேறு பலகுரல் கலைஞர்களும் அக்கம்பக்கத்தினரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



இந்நிலையில் நகைச்சுவை நடிகர்களான ஈரோடு மகேஷ், திருப்பாச்சி பெஞ்சமின், பாடகர் மூக்குத்தி முருகன் ஆகியோர் நேரில் வந்து கோவை குணாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும் அவரது இறப்பிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள், பலகுரல் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலானது கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...