யுகாதி பண்டிகை - உடுமலை ரேணுகாதேவி அம்மனுக்கு திருக்கல்யாணம்

யுகாதி பண்டிகையை ஒட்டி உடுமலையில் திருப்பதி கோவிலில் ரேணுகா தேவி அம்மனுக்கு நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சி, வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு வழிபட்ட பக்தர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற உடுமலை திருப்பதி கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக ரேணுகா தேவி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான யுகாதி பண்டிகையையொட்டி இன்று ஸ்ரீ ரேணுகாதேவி அம்மனுக்கு திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.



முன்னதாக, சக்தி புண்யகம், யுகாதி பூஜை, அலங்கார பூஜை, கன்னிகா பூஜை, மற்றும் ராஜ தரிசனம், தம்பதியர் பூஜை, சுமங்கலி பூஜை, மகா தீபாரதனை, ஊஞ்சல் உற்சவம் ஆசிர்வாதம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்டது. திருக்கல்யாணம் நிகழ்வில் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ரேணுகாதேவி அம்மனை வழிபட்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...