மயில்சாமிக்கு அடுத்தபடியாக கோவை குணாவை பார்க்கிறோம்..! - நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் உருக்கம்!

கோவை குணா தான், எவ்வளவு சம்பாதித்தாலும் நண்பர்கள் உதவி எனக்கேட்டால் அதனை கொடுத்துவிட்டு சென்று விடுவார் என்றும், நடிகர் மயில்சாமிக்கு அடுத்தபடியாக கோவை குணாவை அந்த இடத்தில் வைத்து பார்ப்பதாக பெஞ்சமின் கண்ணீர் மல்க தெரிவித்தார்.



கோவை: நடிகர் மயில்சாமிக்கு அடுத்தபடியாக அந்த இடத்தில் கோவை குணாவை பார்க்கிறோம் என நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பலகுரல் கலைஞரான கோவை குணா நேற்று கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடலானது பிரேத பரிசோதனை முடிந்து விளாங்குறிச்சி பகுதியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

அவரது உடலுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள், பலகுரல் கலைஞர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நகைச்சுவை நடிகர்களான திருப்பாச்சி பெஞ்சமின் மற்றும் மூக்குத்தி முருகன் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு, குணாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பெஞ்சமின், கோவை குணா, நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் எங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மிகவும் எளிமையான மனிதர். இதுவரை யாருடைய மனதையும் அவர் புண்படுத்தியது இல்லை.

எவ்வளவு சம்பாதித்தாலும் நண்பர்கள் உதவி என கேட்டால் அதனை கொடுத்துவிட்டு சென்று விடுவார். நடிகர் மயில்சாமிக்கு அடுத்தபடியாக கோவை குணாவை அந்த இடத்தில் வைத்து பார்க்கிறேன்.

நல்ல மனிதர்களை எல்லாம் கடவுள் சீக்கிரமாக அழைத்துச் சென்று விடுகிறார். தொலைக்காட்சி வருவதற்கு முன்பே கோவை குணா மிகவும் பிரபலமானவர். அப்போது இருந்து அவருடன் இணைந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

கோவை குணாவின் ஆத்மா சாந்தியடைய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாகவும், தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கத்தின் சார்பாகவும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...