கோவையில் கைது செய்யப்பட்ட மாவோய்ஸ்ட்டுகளின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகள் 5 பேரின் நீதிமன்ற காவலை மார்ச் 7ம் தேதி வரை நீடித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் உத்திரவிட்டார்.

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ரூபேஷ், சைனா, வீரமணி, அனூப், கண்ணன் ஆகிய 5 மாவோயிஸ்ட்டுகள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அரசுக்கு எதிராக சதிதிட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் மாவோயிஸ்ட்டுகள் 5 பேரும் இன்று கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த ஐந்து பேரும் சட்டமன்றம், நாடாளுமன்றங்களை விமர்சனம் செய்து முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் வழக்கு விசாரணையின் போது, மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்ட போது அவர்களுக்கு எதிராக சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இருப்பதாகவும், அவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தரவேண்டும் எனவும் மாவோயிஸ்டுகளின் வழக்கறிஞரான பாலமுருகன் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து வழக்கை வருகிற மார்ச் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, சைனா, வீரமணி, அனூப், கண்ணன் ஆகிய 4 பேரை மீண்டும் கோவை மத்திய சிறைக்கும், ரூபேஸ் என்ற மாவோயிஸ்ட்டை கேரள சிறைக்கும் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...